ராஜீவ் காந்தியின் நினைவு நாள் .. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அஞ்சலி
By: vaithegi Sun, 21 May 2023 11:47:33 AM
இந்தியா: ராஜீவ் காந்தியின் 32வது நினைவு நாளை முன்னிட்டு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அஞ்சலி ... முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீரபூமியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி,
பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இவர்கள் அஞ்சலி செலுத்தும் விடீயோவை காங்கிரஸ் கட்சி அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மேலும், ராஜீவ் காந்தியின் பல்வேறு நினைவுகள் அடங்கிய வீடியோவை காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்து உள்ளார்.
அதில், அப்பா, நீங்கள் என்னுடன், ஒரு உத்வேகமாக, நினைவுகளில், எப்போதும் என்று அவர் பதிவிட்டு உள்ளார்.