Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுல் காந்தி 15-வது நாளாக எர்ணாகுளத்தில் நடைபயணத்தை தொடங்கினர்

ராகுல் காந்தி 15-வது நாளாக எர்ணாகுளத்தில் நடைபயணத்தை தொடங்கினர்

By: vaithegi Thu, 22 Sept 2022 09:17:34 AM

ராகுல் காந்தி 15-வது நாளாக எர்ணாகுளத்தில் நடைபயணத்தை  தொடங்கினர்

ஏர்ணாகுளம்: 15-வது நாளாக எர்ணாகுளத்தில் நடைபயணத்தை தொடங்கினர் ..... காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள 'பாரத் ஜோடோ யாத்திரை' தமிழகத்தில் தொடங்கி இப்போது கேரளா வழியாக பயணிக்கிறது.

rahul gandhi,walk , ராகுல் காந்தி ,நடைபயணம்

இதனை அடுத்து இந்நிலையில் இன்று 15-வது நாளாக கேரள மாநிலம் எர்ணாகுளம், தேசோம் பகுதியிலிருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் காலை நடைபயணத்தை தொடங்கியுள்ளார்.

மேலும் எர்ணாகுளம், தேசோம் பகுதியில் பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி சாலக்குடியில் நிறைவு செய்கிறார். இதற்கு இடையே கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி பாதயாத்திரையை ஒருநாள் நிறுத்திவிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லிக்கு செல்கிறார்

Tags :