Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யாத்திரை செல்லும் ராகுல்காந்தி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

யாத்திரை செல்லும் ராகுல்காந்தி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 28 Dec 2022 7:51:51 PM

யாத்திரை செல்லும் ராகுல்காந்தி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

புதுடெல்லி: பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை... இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு: கடந்த 24ம் தேதி ராகுல் காந்தியின் இந்திய ஒருமைப்பாட்டு யாத்திரை டெல்லி வந்தபோது பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருந்தன.

ராகுல் காந்திக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ளது. ஆனால், அவருக்கு டெல்லி போலீசார் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை பாதுகாத்தது காங்கிரஸ் தொண்டர்கள்தான். இதனால் டெல்லி போலீசார் மகிழ்ந்தனர்.

இந்திய ஒருமைப்பாட்டு யாத்திரையில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில் உளவுத்துறையினர் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. யாத்திரையில் பங்கேற்ற பலரிடம் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

Tags :