Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தந்தையின் நினைவிடத்திற்கு முதல்முறையாக செல்லும் ராகுல்காந்தி

தந்தையின் நினைவிடத்திற்கு முதல்முறையாக செல்லும் ராகுல்காந்தி

By: Nagaraj Tue, 06 Sept 2022 5:39:49 PM

தந்தையின் நினைவிடத்திற்கு முதல்முறையாக செல்லும் ராகுல்காந்தி

சென்னை: முதல்முறையாக செல்கிறார்... முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்கு நாளைதான் முதல்முறையாக காங்கிரஸ் எம்.பி.,யும் ராஜிவ்காந்தியின் மகனுமான ராகுல் காந்தி செல்கிறார்.

சோனியா காந்தி சென்று அஞ்சலி செலுத்தியிருந்தாலும் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு எத்தனையோ முறை தமிழ்நாடு வந்தபோதிலும் இதுவரை எப்போதும் ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்துக்குச் சென்றதில்லை. காங்கிரஸ் எம்.பி.யானபோதிலும் சரி, பொதுச் செயலர் என பொறுப்புகளை ஏற்றபோதிலும்கூட செல்லவில்லை.

2009-ல் தமிழகத்தில் மூன்று நாள் முகாமிட்டு 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போதிலும்கூட தந்தைக்கு அஞ்சலி செலுத்த அவர் மறைந்த ஸ்ரீபெரும்புதூர் நினைவிடம் சென்றதில்லை.

crew,hiking,congress,father,hiking,first time ,குழுவினர், நடைபயணம், காங்கிரஸ், தந்தை, நடைபயணம், முதல்முறை

முதல்முறையாக இப்போதுதான், இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் நடத்தும் அகில இந்திய நடைப்பயணத்தைத் தொடக்கி வைக்கத் தமிழகம் வரும் ராகுல் காந்தி, முன்னதாக நாளை புதன்கிழமை காலை ஸ்ரீபெரும்புதூர் சென்று தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

தந்தையின் நினைவிடத்தில் தியானம் செய்யும் ராகுல் காந்தி, பின்னர் சென்னை திரும்பி, திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில்வைத்து அகில இந்திய அளவிலான பிரசாரத்துக்கான உத்தியாக இந்த நடைபயணத்தை காங்கிரஸ் திட்டமிடுகிறது.

கன்னியாகுமரியில் தொடங்கி ஸ்ரீீநகர் வரையில் நடைபெறவுள்ள இந்த பயணத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வழியாக 3,570 கி.மீ. தொலைவை இந்தக் குழுவினர் கடந்து செல்வார்கள்.

Tags :
|
|
|
|