நாளை மணிப்பூருக்கு ராகுல்காந்தி சுற்றுப்பயணம்
By: vaithegi Wed, 28 June 2023 12:33:22 PM
இந்தியா: கடந்த மே மாதம் தொடக்கத்தில் மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூக பிரிவினர்களுக்கு இடையே தொடர்ந்த மொதலானது இன்னும் நீடித்து கொண்டு வருகிறது. இந்த நாள் வரையில் மணிப்பூர் மாநிலம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து கொண்டு வருகிறது. அதனால் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதனை அடுத்து கலவரம் காரணமாக பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாள் பயணமாக மணிப்பூர் மாநிலம் செல்லவுள்ளார்.
மேலும் அங்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பேச உள்ளார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளார்.
மணிப்பூர் மாநில கலவரத்தில் இதுவரை 120 பேர் உயிரிழந்துவுள்ளனர். மேலும் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். பலர் பாதுகாப்பு கருதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுவுள்ளனர்.