Advertisement

ராகுலின் பாத யாத்திரை ஜம்மு காஷ்மீரில் முடிவடைகிறது

By: Nagaraj Tue, 10 Jan 2023 9:35:15 PM

ராகுலின் பாத யாத்திரை ஜம்மு காஷ்மீரில் முடிவடைகிறது

சண்டிகர்: பஞ்சாபில் ராகுல்காந்தியின் நடைபயணம் இன்று தொடங்கிய நிலையில், ஜம்மு காஷ்மீரில் யாத்திரை முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல 150 நாட்கள் ஆகும்.

bharat jodo yatra,chandigarh,congress,rahul gandhi , காங்கிரஸ், சண்டிகர், பாரத் ஜோடோ யாத்ரா, ராகுல் காந்தி

கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை தற்போது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வழியாக பஞ்சாபுக்குள் நுழைந்து வருகிறது.

பஞ்சாபில் இன்று தொடங்கும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் யாத்திரை முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :