- வீடு›
- செய்திகள்›
- பொங்கல் பண்டிகையொட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன
பொங்கல் பண்டிகையொட்டி ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் விற்று தீர்ந்தன
By: vaithegi Sat, 17 Sept 2022 07:01:14 AM
இதனை அடுத்து அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10-ந் தேதிக்கான ரெயில் டிக்கெட்டுகளின் முன்பதிவு கடந்த 12-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஜனவரி 12-ந் தேதி மற்றும் ஜனவரி 13-ந் தேதிக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவுகள், நேற்று முன்தினம் தொடங்கி 10 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.
இந்நிலையில் நேற்று ஜனவரி 14-ந் தேதிக்கான டிக்கெட்டுகள் முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் டிக்கெட்டுகள் விற்று முடிந்தன. மேலும் இதர முக்கியமான எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட்டுகள் விற்காமல் மீதம் இருந்தன.
Tags :