Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாங்கண்ணி, திருப்பதிக்கு புதிய விரைவு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

வேளாங்கண்ணி, திருப்பதிக்கு புதிய விரைவு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

By: vaithegi Mon, 21 Aug 2023 11:11:16 AM

வேளாங்கண்ணி, திருப்பதிக்கு புதிய விரைவு ரயில்கள்  இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை: வேளாங்கண்ணி, திருப்பதிக்கு புதிய விரைவு ரயில்கள் .... ரயில் சேவை நீட்டிப்பு, புதிய ரயில்கள் இயக்குதல், குறிப்பிட்ட ஊரில் நிறுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் வலியுறுத்தி கொண்டு வருகின்றனர். இதையடுத்து இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, ரயில்வே வாரியம் அவ்வப்போது ஒப்புதல் அளித்து கொண்டு வருகிறது.

அந்த வகையில், வேளாங்கண்ணி - எர்ணாகுளம், திருப்பதி - கொல்லம் இடையே புதிய ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து உள்ளது. இதில், வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில்கள் வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். இந்த ரயில் செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை சென்றடையும்.

railway board,fast trains,velankanni,tirupati , ரயில்வே வாரியம் ,விரைவு ரயில்கள் , வேளாங்கண்ணி, திருப்பதி


இதுபோன்று, திருப்பதி - கொல்லம் இடையே வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கொல்லம் வரை இயக்கப்படும்.

இதேபோல, மயிலாடுதுறை - திருச்சி, திருச்சி - கரூர், சேலம் - கரூர் வழித்தடங்களில் தனித்தனியாக இயக்கப்பட்ட ரயில்களை ஒன்றாக இணைத்து, மயிலாடுதுறை - சேலம் வரை விரைவு ரயிலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பாலக்காடு - திருநெல்வேலி வரை இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் சேவையை தூத்துக்குடி வரை நீட்டிக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

Tags :