Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரயில் நிலையங்களில் இனி மண்கோப்பையில் தேநீர் விற்பனை; மத்திய அமைச்சர் தகவல்

ரயில் நிலையங்களில் இனி மண்கோப்பையில் தேநீர் விற்பனை; மத்திய அமைச்சர் தகவல்

By: Nagaraj Tue, 01 Dec 2020 08:33:09 AM

ரயில் நிலையங்களில் இனி மண்கோப்பையில் தேநீர் விற்பனை; மத்திய அமைச்சர் தகவல்

ரயில் நிலையங்களில் இனி மண்கோப்பையில் தேநீர்... நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதில் மண் கோப்பைகளில் இனி தேநீர் விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவுக்கு ரயில்வேயின் பங்களிப்பாக இருக்கும். மண் கோப்பைகள் சுற்றுசூழலை காக்கின்றன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதன் மூலம் வேலை வாய்ப்பை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

mankuvalai,railway stations,tea,union minister ,மண்குவளை, ரயில் நிலையங்கள், தேநீர், மத்திய அமைச்சர்

மத்திய அரசு சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து கொண்டிருக்கின்றது. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சிறு - குறு வேலைவாய்ப்பை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மத்திய ரயில்வே துறை எடுத்துள்ள இந்த முயற்சியும் முக்கிய பங்காற்றுகின்றது. பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் முயற்சியில் தற்போது மண்குவளைகளில் தேநீர் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|