Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாட்டி எடுத்த வெயிலுக்கு ஓய்வு கொடுக்க வந்தது மழை; நாமக்கல் மக்கள் மகிழ்ச்சி

வாட்டி எடுத்த வெயிலுக்கு ஓய்வு கொடுக்க வந்தது மழை; நாமக்கல் மக்கள் மகிழ்ச்சி

By: Nagaraj Sat, 30 May 2020 4:12:12 PM

வாட்டி எடுத்த வெயிலுக்கு ஓய்வு கொடுக்க வந்தது மழை; நாமக்கல் மக்கள் மகிழ்ச்சி

அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் அவதிப்பட்டு வந்த நாமக்கல் மாவட்ட மக்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை மகிழ்ச்சியை அளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில், மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை, மழை வருவதற்கு அச்சாரமாக மேகம் கறுத்து, காற்று வீசியது.

rain,namakkal,warmth,cold air,happiness ,
மழை, நாமக்கல், வெப்பம் தணிந்தது, குளிர்ந்த காற்று, மகிழ்ச்சி

அதையடுத்து, மழை பெய்ய துவங்கியது. ஒரு சில இடங்களில், லேசாகவும், பல பகுதிகளில் கன மழையும் பெய்தது. மேலும் அவ்வபோது தொடந்து மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து, குளிர்ந்த காற்று வீசியது. அதனால், மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.,): குமாரபாளையம், 53.60, நாமக்கல், 4, ப.வேலூர், ஒன்று, புதுச்சத்திரம், 7, சேந்தமங்கலம், 3, திருச்செங்கோடு, 18, என 100 மி.மீ., மழை பதிவானது.

Tags :
|
|