Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை

By: vaithegi Fri, 03 Feb 2023 10:26:52 AM

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை

சென்னை: 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு .... வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை இலங்கை - திரிகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று காலை நிலவக்கூடும்.

இதன் காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

rain,chennai ,சென்னை,மழை

இதனை அடுத்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி ,நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Tags :
|