Advertisement

இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

By: vaithegi Mon, 27 Feb 2023 10:23:47 AM

இன்று முதல் மார்ச் 1-ம்  தேதி வரை மழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு ...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதவாது,

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (26-02-2023) இன்று பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து இன்று ( 27-02-2023) முதல் மார்ச் 1ம் தேதி (01-03-2023) வரை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

rainy,south tamil nadu coastal districts,delta districts ,மழை , தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவடங்கள்

மேலும், மார்ச் 2ம் தேதி ( 02.03.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவித்துள்ளது.

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அதில்.தெரிவிகக்ப்பட்டுள்ளது .

Tags :
|