Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Sun, 18 June 2023 09:51:53 AM

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியிருந்தது.

மேலும் அத்துடன், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

rainy,puducherry,tamil nadu , மழை,தமிழ்நாடு, புதுச்சேரி

எனவே அதற்கேற்ப சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகை, திருப்பூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை மையம் அறிவித்தது போலவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து , இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டு வருகிறது.

Tags :
|