தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும்
By: vaithegi Thu, 20 Apr 2023 09:49:58 AM
சென்னை: இன்று தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு ... இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக.இன்று 20.04.2023: தென் தமிழக மாவட்டங்களில் ஒரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து வருகிற 21-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
மேலும் 22 மற்றும் 23ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதற்கு இடையே தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது