Advertisement

இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Mon, 23 Oct 2023 11:25:25 AM

இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும்


சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நேற்று முன்தினம் தொடங்கியது.

எனவே இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

rainy,tamil nadu,puducherry and karaikal ,மழை ,தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்

வருகிற 25ஆம் தேதி முதல் வருகிற 27ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு ,மையம் தனது முன்னறிவிப்பில் கூறியுள்ளது.

Tags :
|