Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும்

இன்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும்

By: vaithegi Fri, 17 Mar 2023 3:43:03 PM

இன்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் ... தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்று மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

எனவே இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (மார்ச் 17) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

rainy,chennai,chengalpattu ,மழை ,சென்னை, செங்கல்பட்டு

அதே போன்று புதுவையில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடந்து மார்ச் 18,19, 20, 21ஆகிய தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் ஆந்திர மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 55 கீ.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|