Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

By: Monisha Tue, 09 June 2020 5:15:17 PM

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு எந்தெந்த இடங்களில் மழை பெய்யும் என்பது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு பருவ மழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான மழை முதல் மிதமான பெய்ய வாய்ப்பு உள்ளது.

tamil nadu,rain,meteorological center,southwest monsoon,convection ,தமிழ் நாடு,மழை,வானிலை ஆய்வு மையம்,தென்மேற்கு பருவ மழை,வெப்பச்சலனம்

அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|