Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி

ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி

By: Monisha Thu, 21 May 2020 3:35:56 PM

ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி ஆகியோர் ராஜீவ்காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

rajiv gandhi,29th anniversary,prime minister narendra modi,rahul gandhi ,ராஜீவ்காந்தி,29-வது ஆண்டு நினைவு தினம்,பிரதமர் நரேந்திர மோடி,ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தனது தந்தை நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ்காந்தியை போன்ற அன்பான மற்றும் தன்னலமற்ற மனிதருக்கு மகனாக பிறந்ததில் நான் பெருமைப்படுகிறேன். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டை வளர்ச்சியின் பாதை நோக்கி ஊக்குவித்தார். தனது தொலைநோக்கு சிந்தனைகளால், இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கான சாத்தியமான எல்லாவற்றையும் செய்தார். இன்று அவரது நினைவுதினம். இந்த நாளில் அவரை நான் பாசத்தோடும், நன்றியுடனும் நினைவு கூர்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :