Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் புதுச்சேரி மாநில பட்ஜெட்டில் ரங்கசாமி அறிவிப்பு

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் புதுச்சேரி மாநில பட்ஜெட்டில் ரங்கசாமி அறிவிப்பு

By: vaithegi Mon, 22 Aug 2022 1:43:26 PM

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் புதுச்சேரி மாநில பட்ஜெட்டில் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்தார். பின் சட்டசபையில் உரையாற்றிய அவர், "குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் நடத்தப்படும் குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதால் குறைதீர்ப்பு கூட்டத்தை அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், உர விற்பனை அதிகரிக்கக் காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும், கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு, இளைஞர் நலன் துறை தனியாகத் துவங்கப்படும். புதுச்சேரியில் தேசிய சட்டப்பல்கலைக்கழகம் துவங்கப்பட உள்ளது. இதற்கான துவங்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

இதை அடுத்து 12.5 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தி நிலையம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மரச்செக்கு என்னைத் தயாரித்து அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும், அரசுப் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் பொலிவுறு வகுப்புகளாக மாற்றப்படும், தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும், காலியாக உள்ள 50 தீயணைப்பு வீரர்கள் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தீயணைப்புத் துறைக்கு 31.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

puducherry state budget,scholarship,rangaswamy ,புதுச்சேரி மாநில பட்ஜெட்,உதவித்தொகை ,ரங்கசாமி

மேலும் புதுச்சேரியில் நிரந்த தீயணைப்பு பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரியில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் மீன் ஏலக்கூடம் உருவாக்கப்படும், காரைக்கால் முகத்துவாரம் ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரி மாநிலத்தில் சாகர்மால திட்டத்தின் கீழ் மிதக்கும் படகுத் துறைகள் அழைக்கப்படும், காரைக்கால் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும், காரைக்காலில் ரூ.80 கோடியில் புதிய அரசு பொது மருத்துவமனை கட்டப்படும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள ஆவணங்கள், சொத்துக்களை டிஜிட்டல் செய்து பாதுகாக்கப்படும், புதுச்சேரி எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்திற்கு ஏற்கனவே ரூ.1 கோடி வழங்கி வந்த நிலையில் அதை ரூ.2 கோடி வரை அதிகரிக்கப்படும்,

புதுச்சேரி காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு தொடங்கப்படும். இந்த பட்ஜெட்டிற்கு மத்திய அரசு உதவி தொகை 1,729 கோடி ரூபாய் வழங்க உள்ளது. மத்திய அரசின் சாலை நிதியாக 20 கோடி ரூபாய், மத்திய அரசின் கடன் தொகையாக 500 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியில் கடன் திரட்ட 1,889 கோடிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கல்வி துறைக்கு ரூ. 802 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். கல்வி துறை மேம்படுத்தப்படும். புதுச்சேரி கடற்கரைக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் அரிய வகை ஆலீவ் ரெட்லி ஆமைகளை காக்க புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 5 முட்டை பொறிப்பகம் அமைக்கப்படும். காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியியல் மையம் அமைக்கப்படும். மாநிலத்தில் நடமாடும் கால்நடைமையம் அமைக்கப்படும். காரைக்காலில் ஒரு மருத்துவ கல்லூரி துவங்கப்படும், புதிதாக 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.

புதுச்சேரியில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட மிதிவண்டி மீண்டும் வழங்கப்படும். சென்னை- புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் . காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவை தொடங்கப்படும் காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு துவங்கப்படும். அனைத்து காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையம் துவங்கப்படும். அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்ப தலைவிக்கும் தலா 1000 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும்" என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

Tags :