தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க 23ம் தேதி யாழ்ப்பாணத்திற்கு ரணில் விஜயம்
By: Nagaraj Fri, 17 July 2020 7:38:18 PM
வரும் 23ம் தேதி ரணில் விஜயம்... தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவர், யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள்,
கல்வியாளர்களுடனான சந்திப்பையும் ரணில் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையில் பொதுத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிகள் தீவிர
பிரசாரத்தில் இறங்கி உள்ளன.
அந்த வகையில் தங்கள் கட்சிகளை
சேர்ந்தவர்களுக்காக தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த
வகையில் வரும் 23ம் தேதி முன்னாள் பிரதமர் ரணில் யாழ்ப்பாணத்தில் பிரசாரம்
மேற்கொள்கிறார்.