Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரபேல் போர் விமானங்கள் இணைப்பு மிக முக்கியமானது - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

ரபேல் போர் விமானங்கள் இணைப்பு மிக முக்கியமானது - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

By: Karunakaran Thu, 10 Sept 2020 5:55:48 PM

ரபேல் போர் விமானங்கள் இணைப்பு மிக முக்கியமானது - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் ரபேல் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. இவை இந்திய விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் ரபேல் விமானங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, பாதுகாப்பு செயலாளர் அஜய்குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீ‌‌ஷ்ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

raphael warplanes,border issue,india,defense minister rajnath singh ,ரபேல் போர் விமானங்கள், எல்லை பிரச்சினை, இந்தியா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்


இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பிரான்சில் தயாரிக்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டிருப்பது, ஒட்டுமொத்த உலகிற்கும் அனுப்பும் ஒரு பெரிய மற்றும் கடுமையான செய்தியாகும். குறிப்பாக நமது இறையாண்மையின் மீது கண் வைப்போருக்கு உறுதியான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர், எங்கள் எல்லைகளில் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த போர்விமானம் இணைப்பு மிக முக்கியமானது. எனது சமீபத்திய வெளிநாட்டு பயணத்தில், இந்தியாவின் பார்வையை உலகத்தின் முன் வைத்தேன். எந்தவொரு சூழ்நிலையிலும் எங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சமரசம் செய்யக்கூடாது என்ற எங்கள் தீர்மானத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். இதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

Tags :
|