Advertisement

கேரளாவில் அக்.16 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது

By: vaithegi Mon, 09 Oct 2023 4:08:08 PM

கேரளாவில் அக்.16 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது

கேரளா: இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா என்கிற திட்டத்தின் மூலமாக பல்வேறு ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரேஷன் கிட் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.அதாவது, மாநில ரேஷன் கடை ஊழியர்களுக்கு 11 மாத கிட் வழங்கல் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.

ration shops,kerala ,ரேஷன் கடைகள்,கேரளா

எனவே இதனை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று கொண்டு வருகிறது. அதாவது, 11 மாத கிட் வழங்கல் நிலுவைத் தொகை வழங்குதல், ஊதிய தொகுப்பை சீரமைத்தல், பழுதடைந்த இ-பிஓஎஸ் இயந்திரத்தை முழுமையாக சீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருகிற அக்டோபர் 16ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரேஷன் டீலர்கள் சங்கத் தலைவர் தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :