மீண்டும் துவங்கியது... பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச பேருந்து திட்டம்
By: Nagaraj Tue, 06 Dec 2022 10:24:16 AM
புதுச்சேரி: மாணவர்களுக்கு இனி டெய்லி ஃப்ரீ பஸ் தான் என்று அசத்தல் நடவடிக்கை எடுத்துள்ளது புதுச்சேரி அரசு. ஆமாங்க. ஏழை, எளிய மாணவர்களுக்காக மீண்டும் இலவச பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற மாநிலங்களைப் போல மாணவர்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தினம்தோறும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.
இதனால் பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
மீண்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் தற்போது மீண்டும் இலவச பேருந்து
திட்டத்தை இயக்க அம்மாநில அரசு முடிவு செய்தது.
இதையடுத்து
கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, உள்ளிட்ட பலர்
கலந்து கொண்டு கொடி அசைத்து இலவச பேருந்துகளை தொடங்கி வைத்துள்ளனர். இது
பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.