மதுக்கூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம்
By: Nagaraj Fri, 28 July 2023 10:01:54 AM
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் நடந்தது.
வாசகர் வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னதாக 2-ம் நிலை கிளை நூலகர் அண்ணாமலை அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மதுக்கூர் கிளை நூலகத்தை முழு நேர நூலகமாக மாற்றி காலை 8 முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்பட வேண்டும்.
இரண்டு நூலகர்களை நியமிக்க வேண்டும், மதுக்கூரில் உள்ள படித்த கல்வியாளர்கள் மாணவ, மாணவிகள் அனைவரையும் உறுப்பினராக சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் மேகலாதன், துரை ராசு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் துரைராஜன், வட்டார கல்வி அலுவலர் ஓய்வு சுப்பிரமணியன், முத்துக்கண்ணு, செல்வம், பாலசுப்பிரமணியன், எஸ். எஸ். ராஜன், வாசகர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில் புரவலராக அ.தி.மு.க. மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தண்டாயுதபாணி, அன்னை திருமண மண்டபம் ஹரிகரன், கோவிந்தராசு, கதிர்வேலன், கோவிந்தராஜ், முன்னாள் லயன்ஸ் கிளப் தலைவர் எஸ்.எஸ். ராஜன், செந்தில்குமார், சண்முகா ஸ்டோர் ஆகியோர் தலா ரூ. 1000 செலுத்தி இணைந்தனர். முடிவில் நூலக பணியாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.