இந்தியரின் பாதுகாப்பிற்காகவும் எந்த எல்லையையும் கடக்க தயார்: பிரதமர் மோடி சூளுரை
By: Nagaraj Wed, 10 May 2023 11:11:51 PM
ராஜஸ்தான்: எந்த எல்லையையும் கடக்க தயார்... ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பிற்காகவும் எந்த எல்லையையும் கடக்க தாம் தயார் என்பதை காங்கிரஸ் மறந்துவிட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபுவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, சூடானில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டதாக குற்றம்சாட்டினார்.
முன்னதாக, உதய்பூரில் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
நவீன உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில், தமது அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால், அரசியல் நலன்களைத் தாண்டி சிந்திக்க முடியாது எனவும் தெரிவித்தார்.