இரட்டை குடியுரிமையை கைவிட ரெடி... பசில் ராஜபக்ச தகவல்
By: Nagaraj Wed, 08 Feb 2023 8:30:31 PM
கொழும்பு: கை விட தயார்... இரட்டைக் குடியுரிமை தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்குமானால், அதனை கைவிட தயார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை மட்டுமல்ல, மக்களுக்காகப் பணியாற்றுவதற்கு வேறு தடைகள் இருந்தாலும் அதனை கடந்துவர தயார் என்றும் கூறியுள்ளார்.
போராட்டத்தினால் பலர் தமது சொத்துக்களை இழந்துள்ள நிலையில் தனக்கு பெரும் பொறுப்பு இருப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேநேரம் தற்போது எரிவாயு, எரிபொருள் பிரச்சினை மற்றும் 10 மணிநேர மின்வெட்டு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு ரணில் விக்கிரமசிங்கவால் தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
Tags :
property |