Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்புடன் மரியாதைக்குரிய பேச்சுவார்த்தை நடத்த தயார் - வெனிசுலா அதிபர் அறிவிப்பு

டிரம்புடன் மரியாதைக்குரிய பேச்சுவார்த்தை நடத்த தயார் - வெனிசுலா அதிபர் அறிவிப்பு

By: Karunakaran Wed, 24 June 2020 2:54:27 PM

டிரம்புடன் மரியாதைக்குரிய பேச்சுவார்த்தை நடத்த தயார் - வெனிசுலா அதிபர் அறிவிப்பு

தென்அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளமிக்க நாடாகும். தற்போது அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மேலும் அங்கு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இதனால் அதிபர் நிகோலஸ் மதுரோவின் ஆட்சிக்கு தொடர்ந்து நெருக்கடிகள் ஏற்பட்டு வருகிறது.

வெனிசுலாவின் நாடாளுமன்றத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, தற்போது தன்னை இடைக்கால அதிபராக பிரகடனம் செய்து கொண்டுள்ளார். இதனால் நிகோலஸ் மதுரோவின் ஆட்சியில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அரசியலில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது.

venezuelan president,trump,nicholas maduro ,வெனிசுலா அதிபர், நிகோலஸ் மதுரோ,டிரம்ப்

இந்த அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே முழு காரணம் என அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் பேட்டி அளித்தபோது, நிக்கோலஸ் மதுரோ அதிபர் பதவியில் இருந்து விலகுவது குறித்து மட்டுமே அவருடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று கூறினார்.

தற்போது, அதிபர் நிகோலஸ் மதுரோ, தேவையேற்பட்டால் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் எனவும், அதே சமயம் அந்தப் பேச்சுவார்த்தை மரியாதைக்குரியதாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு மத்தியில் அங்கு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|