Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எஸ்.பி.பி.,க்கு பாரத ரத்னா வழங்க முதலமைச்சரிடம் பரிந்துரை

எஸ்.பி.பி.,க்கு பாரத ரத்னா வழங்க முதலமைச்சரிடம் பரிந்துரை

By: Nagaraj Tue, 29 Sept 2020 4:50:23 PM

எஸ்.பி.பி.,க்கு பாரத ரத்னா வழங்க முதலமைச்சரிடம் பரிந்துரை

அமைச்சர் தகவல்... மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் திரையரங்கு திறப்பு குறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். திரைப்படத்துறையில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு, சின்னத்திரை படபிடிப்பு நடத்துவதற்கும் சினிமா போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.

sb balasubramaniam,chennai,theaters,minister ,எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னை, திரையரங்குகள், அமைச்சர்

திரையரங்கு துவங்குவது குறித்து தற்போது வரை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக எந்த ஒரு சரியான வழிகாட்டுதலும் வரவில்லை சரியான வழிகாட்டுதல் வந்த பின்பு, தமிழகத்தில் மருத்துவ குழுவினர் வழங்கக்கூடிய அறிவுரைகளுக்கும் ஏற்ப தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார்.

தமிழகத்தில் தற்போது ஓடீடீ யின் வாயிலாக திரைப்படங்கள் வெளியிடும் விவகாரத்தில் தமிழக அரசு எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. ஓடீடீ பிரச்சினை. உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை. இதுகுறித்து தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக ஒரு முடிவை எடுக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயார் என்றால் பேச்சுவார்த்தையை நடத்த அரசு தயாராக உள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். எனவே, தான் தமிழக அரசு சார்பாக அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு பரிந்துரை செய்து உள்ளோம். இதுகுறித்து முதல்வர் விரைவில் முடிவு செய்து அறிவிப்பார், என்று கூறினார்.

Tags :