Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்

புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்

By: Nagaraj Sun, 22 Nov 2020 1:23:13 PM

புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்

ரெட் அலர்ட் எச்சரிக்கை... புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் 25ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது. பின்னர் அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைபெற்று, புயல் சின்னமாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

red alert,pondicherry,tamil nadu,heavy rain ,ரெட் அலர்ட், எச்சரிக்கை, புதுச்சேரி, தமிழகம், மிக கனமழை

இந்த புயல் சின்னம் வரும் 25ம் தேதியன்று மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புயல் எச்சரிக்கையை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் வரும் 25ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags :