Advertisement

நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

By: vaithegi Thu, 10 Nov 2022 3:45:57 PM

நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நடப்பு ஆண்டில் பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே பரவலாக மழை பெய்து வந்தது. சில நாட்களுக்கு முன்பாக பருவ மழை தொடங்கியதில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி கொண்டு வருகிறது.

கடந்த வாரம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்நிலையில், வங்க கடலில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை பகுதியானது, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற உள்ளது.

red alert,chennai ,ரெட் அலர்ட்,சென்னை

இதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், நாளைய தினம் திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலு இதை தவிர தென் மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை நிலவரமானது நவம்பர் 14ம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வானிலை முன்னறிவிப்பின் படி முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :