அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு
By: vaithegi Wed, 07 June 2023 09:51:26 AM
சென்னை: விண்ணப்பிக்க இன்று இறுதி நாள் .... 2023 -ம் ஆண்டில் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேர அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழில் பயிற்சி நிலையங்கள் போன்றவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தேர்ந்தெடுக்கவும் மாணவர்கள் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அரசு ஐடிஐயில் சேர www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் செயற்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் மாணவர்கள் நேரடியாக வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50 செலுத்த வேண்டும். இதனை அடுத்து பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலை இல்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி ,பாட புத்தகம் ,பஸ் பாஸ், வரைபட கருவிகள், மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூபாய் 750 வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.