Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலை செய்ய ஒத்திகை... நாட்டு வெடிகுண்டு வெடித்த வாலிபர் கைது

கொலை செய்ய ஒத்திகை... நாட்டு வெடிகுண்டு வெடித்த வாலிபர் கைது

By: Nagaraj Wed, 13 Sept 2023 07:05:21 AM

கொலை செய்ய ஒத்திகை... நாட்டு வெடிகுண்டு வெடித்த வாலிபர் கைது

புதுச்சேரி: வெடிக்குண்டு வெடித்து ஒத்திகை... புதுச்சேரியில் ரயில் நிலைய நடைமேடை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒத்திகைப் பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் இருந்தபோது, வெடிச்சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது நாட்டு வெடி வீசிய பரத் என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர்.

teenager arrested,investigation,riot,country bomb,raid ,வாலிபர் கைது, விசாரணை, பரபரப்பு, நாட்டு வெடிகுண்டு, சோதனை

சவ ஊர்வலத்தில் ஆடியபோது தன்னுடன் தகராறு செய்த ஒருவரை கொலை செய்வதற்காக, பட்டாசுகளை கொண்டு நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதனை சோதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|