- வீடு›
- செய்திகள்›
- 9 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை
9 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை
By: Nagaraj Tue, 07 Mar 2023 5:31:40 PM
கோலாலம்பூர்: புதிய கோரிக்கை... 9 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்று கொண்டிருந்த எம்எச்370 விமானம் திடீரென மாயமானது. உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் இந்த விமானத்தைக் கண்டுபிடிக்க கடுமையாக முயற்சித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது.
இந்நிலையில் மாயமான விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள், மலேசிய விமானத்தை சோதனையிட அமெரிக்க நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.