Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குடிவரவுத் தடுப்பு முகாம்களில் விசா ரத்து செய்யப்பட்டு இருந்த 100 பேர் விடுவிப்பு

குடிவரவுத் தடுப்பு முகாம்களில் விசா ரத்து செய்யப்பட்டு இருந்த 100 பேர் விடுவிப்பு

By: Nagaraj Sat, 31 Dec 2022 6:51:20 PM

குடிவரவுத் தடுப்பு முகாம்களில் விசா ரத்து செய்யப்பட்டு இருந்த 100 பேர் விடுவிப்பு

ஆஸ்திரேலியா: 100 பேர் விடுவிப்பு... ஆஸ்திரேலியாவின் முதன்மையான குடிவரவுத் தடுப்பு முகாம்களில் விசா ரத்து செய்யப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சக்கோரிக்கையாளர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் புலம்பெயர்வு விதியின் கீழ் விசா ரத்து செய்யப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ள தகவலின் படி, கடந்த டிசம்பர் 23-ம் திகதியில் இருந்து சிட்னியில் உள்ள வில்லாவுட் தடுப்பு முகாம் மற்றும் மெல்பேர்னில் இருக்கும் குடிவரவு இடைத்தங்கல் முகாம் ஆகியவற்றிலிருந்து பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 22-ம் திகதி விசா ரத்து தொடர்பான வழக்கில் ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கு எதிரான தீர்ப்பு வெளியாகிய நிலையில் இவர்கள் விடுதலைச் செய்யப்பட்டிருக்கலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு குற்றங்களுக்கான மொத்த தண்டனைகள் மூலம் தானாக விசா ரத்து என்பது கூடாது என இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த கேட் பியர்சனுக்கு 10 குற்றங்களுக்காக 4 ஆண்டுகள் 3 மாதங்கள் கூட்டாக தண்டனை விதிக்கப்பட்ட சூழலில் அவரது விசா தானாக ரத்தானது.

judgment,authority,visas,litigation,court,documents ,
தீர்ப்பு, அதிகாரம், விசாக்கள், வழக்கு, நீதிமன்றம், ஆவணங்கள்

இவரது விசா ரத்து பற்றிய வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், பியர்சன் ஒரு குற்றத்துக்கு என்று 12 மாதங்களோ அல்லது அதற்கு அதிகமாகவோ தண்டிக்கப்படவில்லை. ஆதலால் அவரது விசா “கட்டாய ரத்து” என்பதற்குள் பொருந்தாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், விசாக்களை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பயன்படுத்த உள்துறை அமைச்சரை இந்த தீர்ப்பு அனுமதிக்கிறது. தடுப்பில் உள்ள தனது தரப்பினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், வில்லாவுட் தடுப்பு முகாமிலிருந்து கடந்த 27-ம் திகதி 24 பேரும் மெல்பேர்ன் முகாமிலிருந்து 16 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் வில்லியம் லெவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த நடைமுறை மிக வினோதமாக இருப்பதாகக் கூறும் லெவிங்ஸ்டன், தங்கள் விடுதலையை அறிவிக்கும் ஆவணங்களை எதிர்பாரா நேரத்தில் கண்டு சில முகாம் வாசிகள் ஆச்சரியப்பட்டதாக கூறியுள்ளார்.அதே சமயம், அந்த ஆவணங்களில் அவர்களுக்கு என்ன மாதிரியான விசா வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.

Tags :
|
|