Advertisement

மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு

By: vaithegi Thu, 04 Aug 2022 11:10:11 AM

மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர் : தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாகவே படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. இதனால் மேட்டூரில் 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது .

எனவே காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து கொண்டே வருகிறார்கள். மேலும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் காவிரி கரைக்கு செல்லவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

cubic,opening,mettur ,கனஅடி ,திறப்பு,மேட்டூர்

மேலும் மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல் துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பட்டி உள்பட காவிரி கரையோர பகுதிகளுக்கு பொது மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து மேட்டூரில் 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் ,மேட்டூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் புகுந்தது.பாதிக்கப்பட்ட மக்களை தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்க வருவாய்த்துறை ஏற்பாடு பல செய்யப்பட்டுள்ளது.

Tags :
|