Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அரசு குறிப்பிட்ட சில அறிக்கை வெளியீடு

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அரசு குறிப்பிட்ட சில அறிக்கை வெளியீடு

By: vaithegi Thu, 01 Dec 2022 9:18:23 PM

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு அரசு குறிப்பிட்ட சில அறிக்கை வெளியீடு

சென்னை: ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் ... தமிழகத்தில் முறையற்ற மதுபான விற்பனையை தடுக்கும் நோக்கத்தில் அரசே மதுபான விற்பனையை டாஸ்மாக் மூலம் கையில் எடுத்தது. தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் டாஸ்மாக்கின் ஊழியர்கள் பணி நியமனம் அரசின் அறிவுறுத்தலின் படி செய்யப்படுகிறது.

இதனை அடுத்து இந்நிலையில், நியமிக்க ஊழியர்கள் பணி நேரத்தில் கடைகளில் இல்லாமல், வேறு நபர்களை பணிக்கு நியமித்துள்ளது தெரியவந்துள்ளது.இதற்கான புகார்கள் பெறப்பட்டு, தலைமை அலுவலக ஆய்வு குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

tasmac,staff ,டாஸ்மாக் ,ஊழியர்கள்

இதனால் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் அனைத்து மாவட்ட மேலாளர்களும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன்படி, அதிகாரிகள் இனி ஊழியர்கள் முறையாக பணியில் உள்ளார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் வெளி வேலைகளுக்கு செல்லும் போது உரிய அதிகாரியின் அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் பணி பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags :
|