இவர்களுக்கு இலவச தொலைபேசி உதவி எண்கள் வெளியீடு
By: vaithegi Sat, 03 Dec 2022 6:50:48 PM
சென்னை: :தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நுகர்வோர் ஊரக வளர்ச்சி துறை, நன்னடத்தை அதிகாரி, தணிக்கை ஆய்வாளர், உதவி ஜெயிலர், ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கூட்டுறவு சங்கங்க ஆய்வாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 2, 2A தேர்வுகளை நடத்தியது.
எனவே அதன்படி, குரூப் 2 பதவியில் 116 காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ பதவியில் 5413 காலிப்பணியிடங்களும் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து முதல்நிலை தேர்வுகள் மே 21ம் தேதி அன்று நடத்தப்பட்டது. முதல்நிலை தேர்வின் முடிவுகள் நவம்பர் 8ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களால் முதன்மை தேர்வுக்கு தயாராகி கொண்டு வருகின்றனர்.
இதனை அடுத்து இந்த நிலையில், முதன்மை தேர்வுக்கு தேர்வாகியுள்ள தேர்வர்கள் டிசம்பர் 16ம் தேதி வரை தங்களின் சான்றிதழ்களை இ – சேவை மையம் மூலம் பதிவேற்றி கொள்ளலாம் எனவும், இதற்கான விவரங்களை தெரிந்து கொள்ள 18004252911 என்ற இலவச தொலைபேசி எண்களையும் தற்போது வெளியிட்டுள்ளது.