Advertisement

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு

By: vaithegi Tue, 28 Nov 2023 10:05:26 AM

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு

சென்னை: நேற்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இதையடுத்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நாளை வரை வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிலும் குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.

surplus water,sembarambakkam lake , உபரி நீர் ,செம்பரம்பாக்கம் ஏரி


இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நீர் இருப்பை கண்காணிக்கும் பணிகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். புழல், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பூண்டி - 9 செ.மீ., சோழவரம் - 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. புழல் ஏரிக்கான நீர்வரத்து 281 கனஅடியில் இருந்து 663 கன அடியாக அதிகரித்துள்ளது. சோழவரம் ஏரிக்கான நீர்வரத்து 174 கனஅடியில் இருந்து 231 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு, 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட உள்ளது. 24 அடி உயரம் உள்ள ஏரியில் 22.29 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.


Tags :