Advertisement

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

By: vaithegi Wed, 29 June 2022 5:05:58 PM

TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகம்: தமிழகத்தில் துணை ஆட்சியர், துணைக் கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 1 தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குரூப் 1 தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தேர்வர்கள் பங்கு பெற்றிருந்தனர். இந்த நிலையில், குரூப் 1 முதன்மை எழுத்துத்தேர்வுக்கான முடிவுகள் இன்று (ஜூன் 29) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற 137 பேர் அடுத்தகட்ட நேர்காணல் தேர்வுக்கு தகுயானவர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் பெயர், பதிவு விவரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

exam results,tnpsc ,தேர்வு முடிவு,TNPSC

இந்த தேதிகளில் நேர்காணலுக்கு வரும் அனைத்து விண்ணப்பதாரர்களும் உரிய சான்றிதழை எடுத்து வர வேண்டும் என TNPSC தேர்வாணையம் அறிவுறுத்தி இருக்கிறது. இப்போது TNPSC குரூப் 1 நேர்காணல் முடிவடைந்த பிறகு இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கான இறுதி கட்ட தேர்வு நடத்தப்பட உள்ளது.

மேலும் ஜூலை மாத இறுதிக்குள் இதற்கான இறுதிப் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், குரூப் 1 தேர்வுக்கான நேர்காணல் பட்டியலை விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags :