Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிவாரண உதவி - முதல்வர் அறிவிப்பு

விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிவாரண உதவி - முதல்வர் அறிவிப்பு

By: Monisha Sat, 18 July 2020 11:02:15 AM

விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு நிவாரண உதவி - முதல்வர் அறிவிப்பு

சென்னையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-13, பகுதி-40, கோட்டம் 173-க்குட்பட்ட சீனிவாசபுரத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் குபேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 15-ந்தேதி கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரிசெய்வதற்கு இறங்க முயன்றபோது, நாகராஜ் மற்றும் சயின்சா ஆகிய 2 நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

poison gas,death,relief aid,cm edappadi palanisamy ,விஷவாயு,உயிரிழப்பு,நிவாரண உதவி,முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த நாகராஜ் மற்றும் சயின்சா ஆகிய 2 நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தச் சம்பவத்திற்கு காரணமான குபேந்திரன் என்பவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 2 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
|