விமானப்பயணிகளுக்கு முகக்கவசம் அணியும் கட்டுப்பாடு நீக்கம்
By: Nagaraj Thu, 17 Nov 2022 9:10:06 PM
புதுடெல்லி: விமானத்தில் பயணிகள் முகக்கவசம் அணியும் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், விமான பயணத்தின் போது பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிவது இதுவரை நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
விமானங்களில் பயணிக்கும் பயணிகள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை. இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை நிர்வகிப்பது தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கொரோனா தொற்று குறைந்துள்ள வேளையில் முகமூடி அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருகிறது. முகமூடி அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.