ரயில்வே பாதுகாப்பு படையினர் சாதனை குறித்து அறிக்கை
By: Nagaraj Mon, 21 Sept 2020 09:57:35 AM
ஹவாலா பணம் மீட்பு... தெற்கு ரயில்வேயில் 32 இடங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.11 கோடியே 83 லட்சத்து 75 ஆயிரத்து 971 மதிப்பிலான ஹவாலா பணம் மீட்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆா்.பி.எஃப்) 35-ஆவது உதய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, 2019-20 ஆம் நிதியாண்டில் ரயில்வே பாதுகாப்பு படை ஆற்றிய சாதனைகள் குறித்த விவரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
தெற்கு ரயில்வேயின் பல்வேறு ரயில் நிலையங்களில் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த 17 பேர், ரயில்வே பாதுகாப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டனா். வீட்டில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்த 2,659 சிறுவா், சிறுமியா்கள் ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டு, பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். ரயில்வே பொருள்களை திருடிய வழக்கில் 755 போ கைது செய்யப்பட்டு, ரூ.36 லட்சத்து 47 ஆயிரத்து 684 மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டன.