Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை

By: vaithegi Thu, 01 Dec 2022 9:29:29 PM

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை ..... மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும், மேலும் அந்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்றும் தலைவர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில், “மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிச. 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

demand,g.k. vasan ,கோரிக்கை , ஜி.கே. வாசன்

இதையடுத்து நடைமுறையில் உள்ள தொழில்நுட்பச் சிக்கல்களையும், நுகர்வோரின் சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டால், சிறப்பு முகாம்கள் நடைபெறும்காலஅவகாசம் போதுமானதல்ல. எனவே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம்களை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடத்த வேண்டும்.

மேலும், தொடர்ந்து இலவச மின்சாரம் கிடைப்பதையும், மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Tags :
|