மின் அமைப்பு தவறுகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க தீர்மானம்
By: Nagaraj Wed, 02 Dec 2020 3:49:08 PM
இழப்பீடு குறித்து தீர்மானம்... இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் பலவீனங்கள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் உரையாற்றுகையில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைக் கூறியுள்ளார்.
இதற்கான காப்பீட்டுத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அவர், காப்புறுதி
கூட்டுத்தாபனத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மின் தடை உள்ளிட்ட காரணங்களால்
வீட்டு உபகரணங்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் இந்த
காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அக்கலந்துரையாடலில் அவதானம்
செலுத்தப்பட்டதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும
தெரிவித்துள்ளார்.