ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்க கட்டுப்பாடு
By: Nagaraj Sun, 04 Dec 2022 1:38:28 PM
அமெரிக்கா: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரஷ்ய எண்ணெய் விலையை பேரலுக்கு 60 டொலர்கள் என கட்டுப்படுத்த ஜி7 நாடுகள் முடிவெடுத்துள்ளது. இந்த நடவடிக்கை – நாளை திங்களன்று நடைமுறைக்கு வர உள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தனது அழுத்தத்தை தீவிரப்படுத்துகிறது. எவ்வாறாயினும், ரஷ்ய எண்ணெய் வாங்க விரும்புபவர்களை தொடர்ந்தும் ஆதரிப்போம் என புடின் அறிவித்துள்ளார்.
உக்ரேனில் போருக்கு நிதியளிக்கும் மொஸ்கோவின் திறனைத் தாக்கும் முயற்சியில்
தொழில்மயமான நாடுகளின் (அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி,
இத்தாலி, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்) G7 குழுவால் செப்டம்பர்
மாதம் விலை வரம்பு முன்வைக்கப்பட்டது.
இது குறித்து
வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், G7, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும்
ஆஸ்திரேலியா, ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போரில் இருந்து
லாபம் ஈட்டுவதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க
நிதிச் செயலாளர் ஜேனட் யெல்லன், இந்த விலை வரம்பு ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமிர் புடினின் நிதியை மேலும் கட்டுப்படுத்துவதுடன், அவரது
மிருகத்தனமான படையெடுப்பிற்கு நிதியளிக்க அவர் பயன்படுத்தும் வருவாயைக்
கட்டுப்படுத்தும் என்று கூறினார். அதே நேரத்தில் உலகம் முழுவதும் பெட்ரோல்
விலைகள் உயரும் உலகளாவிய விநியோகத்தை சீர்குலைப்பதைத் தவிர்க்கும் எனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் பொருளாதாரம் ஏற்கனவே
வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், விலை வரம்பு உடனடியாக புடினின் மிக
முக்கியமான வருவாய் ஆதாரமாக குறைக்கப்படும், என்று அவர் ஒரு அறிக்கையில்
கூறினார்.