Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரூப் 2,2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் இறுதியில் வெளியிடப்படும் என தகவல்

குரூப் 2,2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் இறுதியில் வெளியிடப்படும் என தகவல்

By: vaithegi Fri, 12 Aug 2022 10:27:30 PM

குரூப் 2,2ஏ  முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் 
இறுதியில் வெளியிடப்படும் என தகவல்

சென்னை :தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. பின்பு தொற்று பரவல் கட்டுக்குள் வந்தவுடன் TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதனால் குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.


மேலும் இத்தேர்வு மூலமாக குரூப் 2 பதவியில் 116 காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ பதவியில் 5413 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இத்தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று அறிவித்தபடி நடைபெற்றது.இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 11,78,000 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இத்தேர்வை 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே எழுதினர்.

group 2,2a,exam ,குரூப் 2,2ஏ,தேர்வு

இந்நிலையில் TNPSC தேர்வு கால அட்டவணையில், குரூப் 2,2ஏ தேர்வின் முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் செப்டம்பர் மாதத்தில் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் கூறப்பட்டு இருந்த நிலையில் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது. ஆனால் இன்னும் குரூப் 2,2ஏ தேர்வின் முதல்நிலைத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இதனால் செப்டம்பர் மாதத்தில் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டதால் இத்தேர்வின் முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது குரூப் 2,2ஏ தேர்வின் முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி இம்மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|