Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருமானம் உயர்ந்துள்ளது... ஆனால் திட்டமிட்டதை விட குறைவுதான்

வருமானம் உயர்ந்துள்ளது... ஆனால் திட்டமிட்டதை விட குறைவுதான்

By: Nagaraj Wed, 21 Dec 2022 9:52:48 PM

வருமானம் உயர்ந்துள்ளது... ஆனால் திட்டமிட்டதை விட குறைவுதான்

சென்னை: அமைச்சர் கூறிய தகவல்... தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பின் மின்வாரியத்தின் மாத வருவாய் ரூ.1000 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனாலும் இது திட்டமிட்டதை விட சற்று குறைவாக தான் இருக்கிறது எனவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தமிழக மின்வாரியத்திற்கு கூடுதலாக ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். தற்போது வரை சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுகளுக்கு அறிவிக்கவில்லை. இந்நிலையில் மாதத்திற்கு மின்வாரியத்திற்கு வருவாய் ஆயிரம் கோடியாக உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இப்படி கூறியுள்ளார். இதுவரை ரூ.34,134 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பொங்கலுக்குள் 50,000-த்தை எட்டி விடும் என அவர் கூறியுள்ளார்.

promotion,minister,power bill,revenue,information,action ,உயர்வு, அமைச்சர், மின் கட்டணம், வருவாய், தகவல், நடவடிக்கை

மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக டிசம்பர் 31-ஆம் தேதி வரை நடைபெறும் முகாம்களை மின் நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை 1.20 கோடி மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணியால் மாதம் தோறும் மின் கட்டணம் அளவிடும் முறை நடைமுறைக்கு வருவதில் தாமதம் ஆகிறது.

அதனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியை தீவிரபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மின்வாரியத்துக்கு மாத வருவாய் இதுவரை ரூ.7 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 13.71 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Tags :