மீண்டும் கலவரம் ...இம்பால் பகுதியில் ஊரடங்கு அமல்
By: vaithegi Fri, 22 Sept 2023 1:40:01 PM
மணிப்பூர் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மெய்தெய் என்கிற சமூகத்தினர் தங்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதில் ஆரம்பித்த கலவரம் தற்போது வரையிலும் நீண்டு கொண்டு வருகிறது.
இதனால், 2 சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு மணிப்பூரிலிருக்கும் வீடுகள் அனைத்தையும் இடித்தும், வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்தும் கொளுத்தி நாசமாக்கினர். மேலும், இக்கலவரத்தில் சிக்கி பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்த நிலையில், அவ்வப்போது கலவரம் ஏற்படும் பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் கலவரத்தில் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்களை விடுவிக்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திஉள்ளனர்.
இதையடுத்து இப்போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில் கண்ணீர் புகை கொண்டு வீசி போலீசார் போராட்டத்தை கலைத்தனர். அந்த வகையில், தற்போது இம்பால் பகுதியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.