ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு
By: Nagaraj Tue, 21 July 2020 8:28:40 PM
விசாரணைக்கு ஆஜராக அழைப்பு... 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் சி.ஐ.டி.யின் கோரிக்கையைத் தொடர்ந்து, ரிஷாட் பதியுதீனை ஜூலை 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர்
மீதான விசாரணையை தேர்தல் நிறைவடையும் வரை ஒத்திவைக்குமாறு தேசிய தேர்தல்கள்
ஆணைக்குழு குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும்
தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள ரிஷாட் பாதியுதீனை
அழைப்பது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டால், தற்போது காவலில் வைக்கப்பட்டு
உள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும் என பதில் பொலிஸ்மா அதிபர்
இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.