மணிப்பூர் நிலசரிவில் உயரும் பலி எண்ணிக்கை.. மனதை உலுக்கியது..
By: Monisha Sat, 02 July 2022 9:20:21 PM
மணிப்பூர்: மனிப்பூர் மாநிலத்தின் நோனி மாவட்டத்தில் மராங்சிங் ரயில்வே கட்டுமான பகுதியில் ஏற்ப்ட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18இல் இருந்து 29 ஆக உயர்ந்து உள்ளது. சம்பவ இடத்தில் இன்னும் 34 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிந்தது.
மணிப்பூர் ,மாநிலம் இம்பால் - ஜிரிபால் இடையில் நடைபெற்று வந்த ரயில்வே பாதை அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுப்பட்டு வந்தனர். அந்த இடத்தில்தான் பிரதேச ராணுவபடையின் அலுவலகம் உள்ளது.
கடந்த ஜூன் 29 புதன்கிழமை அன்று இரவு நடந்த நிலச்சரிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.
இவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து பிபிசியின் செய்தியாளர்கள் அனுப்பிய புகை படம் மனதை உலுக்கியது.